பாக். ஆட்சியாளரின் ஆலோசகராக அணு விஞ்ஞானி நியமனம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் ஆலோசகராக பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் அணுகுண்டு துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் அப்துல் காதிர் கான்.
கடந்த 99ம் ஆண்டு இந்தியாவிற்கு போட்டியாக பாகிஸ்தான் அணுகுண்டு வெடிக்க தேவையான அணுகுண்டுகளை தயாரித்து கொடுத்தவர் காதிர் கான்.
இந்தியாவில், மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் பிறந்த அப்துல் காதிர்கான் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப்பபின் 1952ல்பாகிஸ்தான் சென்று குடியேறினார்.
1974ம் ஆண்டில் இந்தியா அணுகுண்டு சோதனை செய்த பின் பாகிஸ்தானும் அணுகுண்டு உருவாக்க முடிவு செய்தது.
ஹாலந்து நாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அப்துல் காதிர்கான் பாகிஸ்தான் திரும்பி கான் ரிசர்ச் லேபாரேட்டரிஸ் (கே.ஆர்.எல்) என்ற ஆராய்ச்சி அமைப்பைதுவக்கினார்.
1976ல் அப்போதைய பாக்.பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோவின் உத்தரவின் பேரில் அணுகுண்டு தயாரித்த காதிர்கான் அதற்குத் தேவையான கதிரியக்கப்பொருள்களை ஐரோப்பாவில் இருந்த திருடி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனால், இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நிறைந்த பல்வேறு பங்களாக்களில் ஒன்றில் அவரை ரகசியமாக பாதுகாத்து வருகிறது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிக்கும் திறன் பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்த பாகிஸ்தான் கடைசியில் தன்னாலும் அணுகுண்டு தயாரிக்க முடியும்,தயாரித்து உள்ளோம் என்ற அறிவித்த பின்னர் தான் அப்துல் காதிர்கான் பொது மக்கள் பார்வையில் தென்பட்டார்.
இதற்கு காரணம் பாகிஸ்தான் அணுகுண்டு ரகசியங்களை திருடவில்லை. பல ஆண்டு காலம் முயற்சித்து அணுகுண்டு தயாரிக்கும் திறனை வளர்த்து கொண்டது எனஉலகிற்கு காட்டுவதற்காகத் தான்.
இத்தகைய முக்கிய புள்ளியான காதிர்கான், தனது கடைசி காலம் வரை கான் ரிசர்ச் லேப்பின் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதையே விரும்பினார்.
கடந்த காலங்களில் பெனாசிர் புட்டோ, நவாஸ் செரீப் போன்றோர் கூட கானை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்து முடியாமல் தோற்றுப் போயினர்.
ஆனால, பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாாரப், கானை தற்போது தனது அறிவியல் ஆலோசகராக நியமித்து உள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.