திமுக-மதிமுக மோதல்: பா.ஜ.க. கவலை
மதுரை:
தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கூட்டணி உடையும்நிலை உருவாகியிருப்பதால் பாரதீய ஜனதா கவலையடைந்துள்ளது.
தி.முக.-மதிமுக பிரிவு, கடந்த முறை மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை கவிழ்த்துவிட்டஜெயலலிதாவுக்கு சாதகமாகப் போய்விடும் என்பதால் அக் கட்சிகவலையடைந்துள்ளது.
இந்தப் பிரச்சனையை இரு கட்சிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள இன்னும் கூடஅவசாகமும் வாய்ப்பும் இருப்பதாக பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்திகூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தொகுதிள் அடையாளம் காண்பதில்நிலவி வரும் பிரச்சனையை இரு கட்சிகளும் பேசி தீர்த்துக் கொள்ள வாய்ப்பு இன்னும்உள்ளது. இரு கட்சிகளுக்குமிடையே சமரசம் ஏற்படுத்தும் எந்த விதமானமுயற்சியிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்.
இரு கட்சிகளில் எது பெரிய கட்சியோ (திமுக) அது முன் வந்து இரு கட்சிகளும் ஒப்புக்கொள்ளும் விதமான ஒப்பந்தத்திற்கு வழி வகுக்க வேண்டும்.
தி.மு.க- ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கிடையே சமாதானம் ஏற்பட இன்னும்வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
1996ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் அதிகமானதொகுதிகளில் பா.ஜ.க.போட்டியிட்டது. ஆனால் அதற்கு பின் நடைபெற்ற இரண்டுநாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை குறைத்துக் கொண்டுதோழமை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கிக் கொடுத்தோம்.
பா.ஜ.கவுக்கும், தி.மு.கவுக்கும் இடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.நாங்கள் தி.மு.கவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்.
ம.தி.மு.க. -தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகினால் நாங்கள்தி.மு.கவுக்காக மட்டுமே பிரசாரம் செய்வோம் என்றார்.
யு.என்.ஐ.