For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரோலில் தாயாரை சந்தித்த பாஷா

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா சனிக்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டார். அவரது தாயாரைப் பார்த்துநலம் விசாரித்தார்.

கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டு உள்ளவர் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா.

உடல் நலமில்லாமல் இருக்கும் தனது தாயாரை பரோலில் சென்று சந்திக்க அனுமதி கோரி இருந்தார்.

கோவை இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, 6 மணி நேரம்பரோலில் செல்ல பாட்ஷாவிற்கு அனுமதி வழங்கினார்.

இதையடுத்து பாட்ஷா சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த போலீஸ்பாதுகாப்புடன் வின்சென்ட் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவரைப் பார்த்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். ஆறு மணி நேரபரோலுக்குப் பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X