ஜி.எஸ்.எல்.வி. விரைவில் ஏவப்படும்: அப்துல் கலாம்
டெல்லி:
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் நல்லநிலையில் இருக்கிறது. விரைவில் அதன் தொழில்நுட்பக் கோளாறுகள்சரிசெய்யப்பட்டு ஏவப்படும் என பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் விஞ்ஞானி அப்துல் கலாம் தெரிவித்தார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களை சந்தித்த அப்துல் கலாம், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்திஉருவாக்கப்பட்டது.
ராக்கெட்டின் பாகங்கள் முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்ததால், கடைசி நேர தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதும்தானாகவே விண்ணில் செலுத்துவதை நிறுத்தி கொண்டது.
இதனால், ராக்கெட்டின் பாகங்கள் எதுவும் பாதிக்கப்படாமல் நல்ல நிலையில் உள்ளன. பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியஇந்திய விஞ்ஞானிகள் இந்த கோளாறை சரிசெய்து விரைவில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனதெரிவித்தார்.