உடைகிறது ஜாதிக் கட்சி
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ்தேசம் கட்சி உடைகிறது. அதன் துணைத் தலைவர் ராமச்சந்திர மருதுபாண்டியன் கட்சியில் இருந்துவிலகி தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார்.
யாதவ மக்களுக்காக துவக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சி, யாதவர்களுக்காக பாடுபடாது. பிற்பட்டவர்கள் மற்றும்ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடும் என கட்சியின் தலைவர் கண்ணப்பன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத்தலைவர் ராமச்சந்திர மருதுபாண்டியன் கட்சியில் இருந்து விலகி உள்ளார்ர்.
திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களை சந்தித்து இதனை தெரிவித்த மருதுபாண்டியன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் மாவட்ட தலைவர்களுடன்விவாதித்து வருகிறேன். யாதவர்களுக்காக தனிக்கட்சி ஆரம்பிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications