ஏப்.6 ல் தொகுதி பட்டியல் வெளியிடுகிறது அதிமுக
சென்னை:
அதிமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியலை வரும் 6 ம் தேதி வெளியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதிகளை அடையாளம் காணும் விஷயத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 47 தொகுதிகளைத் தேர்வு செய்து கொள்ளும்வகையில் 70 தொகுதிகள் கொண்ட பட்டியலை மூப்பனாருக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.
ஆனால் இந்தத் தொகுதிகளில் தமாகா போட்டியிட விரும்பும் தொகுதிகளிலேயே காங்கிரசும் போட்டியிடவிரும்புகிறது.
இதே போல் இந்தப் பட்டியலில் உள்ள சில தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக பாமகவும் கூறி வருகிறது.
இதனால் தொகுதிகளை அடையாளம் காண்பதில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் மூப்பனாரை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார் ஜெயலலிதா.அப்போது வரும் ஏப்ரல் 6 ம் தேதி நல்லநாளாக இருப்பதால் தொகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றுமூப்பனாரிடம் உறுதிபட கூறினார்.
இதனால், ஜெயலலிதா கொடுத்த 70 தொகுதிகளில் தமாகாவும், காங்கிரசும் போட்டியிடுவதற்காக 47 தொகுதிகளைஅடையாளம் கண்டு அந்தப் பட்டியலை மீண்டும் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார் மூப்பனார். அதில்கட்டாயமாக தரப்பட வேண்டிய தொகுதிகள், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய தொகுதிகள் என்றுகுறிப்பிட்டுள்ளார் மூப்பனார்.
இருப்பினும், அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளில் போட்டியிட தமாகா, பாமக, காங்கிரஸ் கட்சிகள்போட்டியிட விரும்புவதால் தொகுதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் வரும் வெள்ளிக்கிழமை தொகுதிப் பட்டியலை வெளியிடுவோம் என்று ஜெயலலிதா கூறியிருப்பதாகஅதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications