வீட்டு காவலில் ஹூரியத் தலைவர்
ஜம்மு:
ஹூரியாத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர், அவரது கட்சி தலைவர்கள் 15 பேருடன் வீட்டுக் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
ஹூரியத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் கானி லோன் காஷ்மீர் தீவிரவாத தலைவர்களுடன் மத்தியஅரசு பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதை ஆதரித்து பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த பேரணி ஜம்மு - காஷ்மீர் பகுதியிலுள்ள காத்துவாவில் நடைபெறும் எனவும் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த பேரணிக்கு ஜம்மு - காஷ்மீர் பாரதிய ஜனதா கட்சியினரும், சிவசேனா கட்சியினரும் எதிர்ப்புதெரிவிதனர். இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாநில அரசை கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்து ஹூரியாத் மாநாட்டு கட்சி நடத்தவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும்ஹூரியாத் மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் கானி லோன் அவரது ஆதரவு தலைவர்கள் 15 பேருடன்,ஜம்முவில் புதன்கிழமை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.