திருச்சி சுங்கவரி ஆணையம் வரி வசூலில் சாதனை
திருச்சி:
திருச்சி சுங்கவரி ஆணையம் 2000-2001ம் ஆண்டில் வரி வசூல் மூலம் ரூ 490.99 கோடி வருவாய் ஈட்டி சாதனைபுரிந்துள்ளது.
இது குறித்து சுங்க வரித்துறை கமிஷனர் அஜீத் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி சுங்கவரித்துறைசென்ற ஆண்டு வருவாயான ரூ 379.91 கோடியைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
2000-2001ம் ஆண்டின் வருவாய் 53.48 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மற்றசுங்கவரித்துறை ஆணையங்களின் வருவாயை விட அதிகமாகும். திருச்சிதான் வரி வசூல் வருவாயில் இந்தியாவில்முதலிடம் வகிக்கிறது.
கடத்தல் தடுப்பு நடவடிக்கை மூலமும் அதிக அளவில் திருச்சி ஆணையம் வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் ரூ11.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது மத்திய சுங்க கலால் வாரியம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விடஅதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 203 கேஸ்களை கண்டு பிடித்து ரூ 9.35 கோடிவசூல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய கலால் ஆணையம் 1999-2000ல் வரி வசூல் மூலம் ரூ 907.14 கோடி வருவாய் ஈட்டியது. ஆனால்2000-2001ம் ஆண்டு ரூ 1011.70 கோடி வருவாய் ஈட்டியுள்ளது இது கடந்த ஆண்டை காட்டிலும் 11.53சதவிகிதம் அதிக வருவாயாகும் என்றார்.
யு.என்.ஐ.