சென்னையில் ரவுடி படுகொலை
சென்னை:
சென்னை புறநகர் அருகே சித்தலப்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடி ஒருவர், ஆறு பேர் கொண்ட கும்பலால்புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், சித்தலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தேசிங்கு. வயது 48. இவர் 1998ம் ஆண்டு பிர்லா போஸ் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய மற்றும் 6 வது குற்றவாளி ஆவார்.
புதன்கிழமை இவரது வீட்டுக்குச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் இவரை வெளியே அழைத்தது. உடனேஅவரை ஆயதங்களால் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றனர்.
முன்னதாக, அதிமுக தொண்டர் ஸ்டான்லி சண்முகம் என்பவரைக் கொலை செய்தது தொடர்பாக ரவுடி பிர்லாபோசின் சகோதரர் நாகேந்திரன் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ரவுடி தேசிங்கும் அதிமுகவைச் சேர்ந்தவர்.
அதனால் நாகேந்திரனின் ஆட்கள் அதிமுகவைச் சேர்ந்த தேசிங்கைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார்கருதுகின்றனர்.
தேசிங்கு முதலில் வடசென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வந்தார். இந்த இடத்தில்தான் பிர்லா கொலைசெய்யப்பட்டார்.
பிர்லாவின் கொலை வழக்கில் தொடர்புடைய இவர், அங்கு பிர்லாவின் ஆட்களாலும், அவரது சகோதரர்நாகேந்திரனாலும் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி அங்கிருந்து தனது வீட்டை சித்தலப்பாக்கம்பகுதிக்கு மாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications