இலங்கையில் விரைவில் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும்?
கொழும்பு:
இலங்கையில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப்பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் தேதியை இலங்கைவெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளோம் என்று கூறுகிறார்கள்விடுதலைப்புலிகள்.
மேலும் புலிகள் கட்டுப்பாட்டில் வாழும் தமிழர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கஇலங்கை அரசு உதவும். புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் சண்டை நிறுத்தம்செய்யவுள்ளது இலங்கை அரசு.
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
புலிகள், தங்களிடம் ஆயுதங்கள் இல்லாத காரணத்தாலும், தாங்கள் பலமிழந்துள்ள நிலையிலும் தான் சண்டைநிறுத்தம் அறிவிப்பார்கள். கடந்த காலங்களில் இதே போல் நடந்துள்ளன.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு 1983 ம் ஆண்டு முதல் புலிகள் சண்டையிட்டு வருகிறார்கள். புலிகளுக்கும்,ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்என்பது அனைவரும் அறிந்ததே.
உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்தும் வகையிலும், இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும்பேச்சுவார்த்தை நடத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அதற்கு முன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம், நேரம், பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முக்கியநபர்கள் ஆகியவை குறித்து நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும்அத்தியாவசியப் பொருட்களை அனுப்பத் தீர்மானித்துள்ளோம்.
இந்த மாத இறுதிக்குள் எப்போது பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என்பது குறித்து அறிவிப்போம் என்றார்.
கடந்த சில மாதங்களாக இரு தரப்பினரும் அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுத்த பல விதங்களில் முயற்சிகள்மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications