இலங்கையில் விரைவில் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும்?
கொழும்பு:
இலங்கையில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப்பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் தேதியை இலங்கைவெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளோம் என்று கூறுகிறார்கள்விடுதலைப்புலிகள்.
மேலும் புலிகள் கட்டுப்பாட்டில் வாழும் தமிழர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கஇலங்கை அரசு உதவும். புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் சண்டை நிறுத்தம்செய்யவுள்ளது இலங்கை அரசு.
இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.அதுகுறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
புலிகள், தங்களிடம் ஆயுதங்கள் இல்லாத காரணத்தாலும், தாங்கள் பலமிழந்துள்ள நிலையிலும் தான் சண்டைநிறுத்தம் அறிவிப்பார்கள். கடந்த காலங்களில் இதே போல் நடந்துள்ளன.
இலங்கையில் தனி ஈழம் கேட்டு 1983 ம் ஆண்டு முதல் புலிகள் சண்டையிட்டு வருகிறார்கள். புலிகளுக்கும்,ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்என்பது அனைவரும் அறிந்ததே.
உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்தும் வகையிலும், இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும்பேச்சுவார்த்தை நடத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் அதற்கு முன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம், நேரம், பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் முக்கியநபர்கள் ஆகியவை குறித்து நாங்கள் முடிவு செய்ய வேண்டும்.
வன்னி பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும்அத்தியாவசியப் பொருட்களை அனுப்பத் தீர்மானித்துள்ளோம்.
இந்த மாத இறுதிக்குள் எப்போது பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என்பது குறித்து அறிவிப்போம் என்றார்.
கடந்த சில மாதங்களாக இரு தரப்பினரும் அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுத்த பல விதங்களில் முயற்சிகள்மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications