For Daily Alerts
Just In
சென்னை புறநகரில் பெண் படுகொலை
சென்னை:
சென்னை புறநகர் பகுதியில் 24 வயது பெண் நகக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருப்பதுசெவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னையின் புறநகர் பகுதியான கொடுங்கையூரில் கெளசர் பானு (வயது 24)என்பவர் அவரது வீட்டில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பானுவின் மகன் அவரை எழுப்பச் சென்ற போது அவர் இறந்திருப்பதை கண்டு பிடித்தார். பானுவின் உடலில்நகக்காயங்கள் காணப்படுவதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
பானுவின் கணவர் டெல்லியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து திரும்பி வந்தவுடன், பானுவின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, April 5, 2001, 5:30 [IST]