புதிய குஜராத்தை உருவாக்குவோம்: கிளின்டன்
பூஜ் (குஜராத்):
ஜனவரி 26 ம் தேதி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை மீண்டும் நாம் ஒன்றிணைந்து பழையநிலைக்குக் கொண்டு வருவோம் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் தெரிவித்தார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ் பகுதியை நேரில் பார்வையிட்டபின் கிளின்டன் நிருபர்களிடம் கூறியதாவது:
பூகம்பத்தால் ஏற்பட்ட சோகம் ஒரு பக்கம் இருந்தாலும், பூகம்ப நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும்மக்களைப் பார்த்து நான் மிகவும் மகிழச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.
பூகம்ப நிவாரண உதவிகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
இருப்பினும் உடனடியாகக் கட்டப்பட வேண்டியவை பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகள்.இவைகள் கட்டி முடிக்கப்பட்ட பின் மக்களுக்கு வேலைகள் வாங்கிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பின்னர் அவர்களுக்கு சுத்தமான தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். நாங்கள், பூகம்ப நிவாரண நிதிக்காக பலமில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளோம். அவற்றை நிவாரணநிதிக்காகக் கொடுத்துள்ளோம். இப்போதுகுஜராத்தில் பூகம்ப நிவாரணப் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்து பார்வையிட வந்துள்ளோம்என்றார் கிளின்டன்.
முன்னதாக, இந்தியா வந்துள்ள கிளின்டன், புதன்கிழமை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அஞ்சார் மற்றும் பூஜ்பகுதிகளை பார்வையிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications