இலங்கையில் 2 தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பு: விசாரணை நடத்த உத்தரவு
கொழும்பு:
இலங்கையில் கடற்படை வீரர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுகுறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 19 ம் தேதி புலிகளுக்கு உதவி செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 2 தமிழ்ப்பெண்கள் கைது செய்து கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த இரண்டு பெண்களும் கடற்படை வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர் என்று புகார் எழுந்தது. இந்தச்சம்பவத்துக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக டெலோஇயக்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து இலங்கை அமைச்சர் அனுராயப்பா கூறுகையில், கடற்படை வீரர்கள், தமிழ்பெண்கள் இரண்டு பேரைக் கற்பழித்தது தொடர்பாக போலீசாரும், ராணுவ மனித உரிமைப் பிரிவும் தனித்தனியாகவிசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் எந்த தமிழ் பெண்களையும் கடற்படை வீரர்கள் கற்பழிக்கவில்லைஎன்று இலங்கை கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.