சிகரெட்டால் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 3 பேர் பலி
சென்னை:
திருவள்ளூர் அருகே சனிக்கிழமை நடந்த பட்டாசு விபத்தில் 3 பேர் இறந்தனர்.
திருவள்ளூர், சோழாவரம் அருகே இருக்கும் பன்னீர்வாக்கத்தில் இருக்கும் பட்டாசுதொழிற்சாலையில் சனிக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது.
பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர் சிகரெட் பற்ற வைத்தபோது அவரதுஉடைகள் தீப்பிடித்துக் கொண்டது. அவர் பயத்தில் என்ன செய்வது என தெரியாமல்பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடி வந்தார்.
அவர் உடலில் இருந்த தீ பட்டாசுகளில் பற்றிக் கொண்டது. இதையடுத்து பட்டாசுகள்பெரும் சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்தன. அந்த இடத்திலேயே வெடி விபத்துக்குகாரணமானவரும், இன்னொருவரும் உடல் கருகி இறந்தனர்.
இந்த விபத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியில் நரவாரிக்குப்பத்தில் வசித்து வந்த மீனாட்சி (35)என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் ஞாயிற்றுக்கிழமைகாலை இறந்து போனார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications