புலி தந்த கிலி
ஊட்டி:
கோயில் விழாவில் சிறுத்தைப் புலி புகுந்ததால், பக்தர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே கிரேமோர் என்ற எஸ்டேட் பகுதி உள்ளது.
இந்தப் பகுதியில் மயில்மலை என்ற இடத்தில் முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவைமுன்னிட்டு பொதுமக்கள் அதற்கான விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதிக்கு சிறுத்தை வந்தது. யாரையும் தாக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் பயந்து ஓடினர். ஆனால், சிறுத்தை அப்படியே நின்றுகொண்டிருந்தது. பின்னர், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து வெடிகளை வெடித்தும், ஒலிபெருக்கியில் பெரும் சத்தத்தைப்போட்டும் அதனை விரட்டினர்.
இதையடுத்து காட்டுப் பகுதிக்கே திரும்ப ஓடிவிட்டது புலி. புலி மறைந்தாலும், பக்தர்கள் "கிலி இன்னும் மறையவில்லை.