புலிகள் முகாமில் இலங்கை போர்விமானங்கள் தாக்குதல்
கொழும்பு:
வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு புலிகள் முகாமில், இலங்கை போர்விமானங்கள் செவ்வாய்க்கிழமைதாக்குதல் நடத்தின.
முன்நிபந்தனையுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று புலிகள் அறிவித்துள்ள நிலையில், இலங்கைஅரசு, புலிகள் முகாமில் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே, கூறுகையில், யானையிறவு, முகமலை மற்றும்அப்பகுதியிலுள்ள கடல் புலிகள் முகாமில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் மூலம் தாக்குதல்நடத்தப்பட்டது என்றார். இந்தத் தாக்குதல் குறித்து அவர் வேறு தகவல்கள் எதுவும் கொடுக்கவில்லை.
இதற்கிடையே, புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலிகள் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து கடைபிடித்துவரும் சண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களும் சண்டை நிறுத்தம் செய்யஒப்புக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசோ, எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள்அறிவிப்பதாகக் கூறியிருந்தது.
இலங்கையில் கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நடந்து வரும் 64,000 பேர்உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications