பஸ்சில் கலாட்டா: 3 பேர் காயம்
சுகுணாபுரம் (கோவை):
பஸ்சில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட தகராறில் கோவை அருகே இரண்டு கிராம மக்களுக்கும் இடையேஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். 11 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை குனியத்தூர் அருகே உள்ள சுகுணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் அறிவொளி நகரைச் சேர்ந்த சிலரும்ஒரு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கிண்டலால், இந்த இரு கிராம மக்களுக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் ஆத்திரமடைந்த சுகுணாபுரத்தைச் சேர்ந்த சிலர் சங்கர், சாமுவேல், சின்னசாமி ஆகியோரைப்போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்த அறிவொளி நகரைச் சேர்ந்த மக்கள், சுகுணாபுரத்திற்கு வந்து தாக்க முயன்றனர்.தகவல் அறிந்ததும் போலீசார் இந்த இரு கிராமங்களுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த மோதலைத் தடுத்துநிறுத்தினர்.
மோதலில் ஈடுபட்ட இரு கிராம மக்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications