For Daily Alerts
Just In
3 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்கிறது இலங்கை அரசு
கொழும்பு:
3 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்யத் தயார் என்று இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இலங்கையில் அமைதி ஏற்படும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவித்தது புலிகள்இயக்கம். அவர்கள் அறிவித்த சண்டை நிறுத்தம் 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட நார்வேதூதுக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஏப்ரல் 13 ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 16 ம் தேதி இரவு வரை 3 நாட்கள் சண்டை நிறுத்தம்செய்வதாக இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இலங்கை ராணுவ வீரர்களுக்கும், தனி ஈழம் கேட்டுப் போராடும் புலிகளுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாகசண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, April 10, 2001, 5:30 [IST]