For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்கிறது இலங்கை அரசு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

3 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்யத் தயார் என்று இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கையில் அமைதி ஏற்படும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 24 ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவித்தது புலிகள்இயக்கம். அவர்கள் அறிவித்த சண்டை நிறுத்தம் 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட நார்வேதூதுக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஏப்ரல் 13 ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 16 ம் தேதி இரவு வரை 3 நாட்கள் சண்டை நிறுத்தம்செய்வதாக இலங்கை அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கை ராணுவ வீரர்களுக்கும், தனி ஈழம் கேட்டுப் போராடும் புலிகளுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாகசண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X