அரியலூரில் மருத்துவரை தாக்கிய இளைஞர் கைது
அரியலூர்:
இறப்புச்சான்றிதழ் கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு தலைமை மருத்துவ அதிகாரியை தாக்கியஇளைஞர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மருத்துவமனையில் பழனிமுத்து என்பவரின் சகோதரி சமீபத்தில் இருதய நோய் காரணமாக இறந்துபோய் விட்டார். இறப்புச்சான்றிதழ் பெறுவதற்காக பழனிமுத்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமைசென்றிருந்தார்.
நோயாளிகள் அதிகம் பேர் சிகிச்சைக்காக காத்திருப்பதால், இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு சற்று நேரம்காத்திருக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயராமன் கூறினார்
ஆனால் காலதாமதத்தை பொறுக்க முடியாத பழனிச்சாமி நோயாளின் கண்முன்னேயே டாக்டர் ஜானகிராமன் மீதுபாய்ந்து அவரை தாக்கினார். டாக்டரை தாக்கி அவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனாலும் அங்கிருந்தவர்கள் அவரைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டாக்டர் ஜானகிராமனின் உடல் நிலைசீராக இருக்கிறது என போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.