தொழில் போட்டியில் பெண் கொலை: கொலையாளி கைது
ஈரோடு:
தொழில் போட்டியில், ஆளை ஏவி கொலை செய்த பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் அருகே உள்ள பெரமியத்தைச் சேர்ந்தவர் சரசு. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புஇறந்து விட்டார்.
இதையடுத்து, தனியாக இருந்து வந்த இவரிட பல ஆண்கள் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். இந்த ஆண்கள்சரசுக்கு விரைவில் வாடிக்கையாளர்களாகவே மாறிவிட்டனர். இவரது வீட்டிற்கு தினம் ஆண்கள் வந்து தங்கிச்சென்று வந்துள்ளனர்.
அதே ஊரைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவரும் இதே தொழிலை நடத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும்இடையே தொழில் போட்டி ஏற்பட்டது. ஆண்களை அதிகமாக பழனியம்மாள் கவரத் தொடங்கினார்.
இதனால், இந்தப் போட்டி பொறாமையாக மாறியது. சரசுவின் வீட்டிற்கு வாடிக்கையாளர்கள் அதிகம் செல்வதைக்கண்ட பழனியம்மாள், சரசுவைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். பழனியம்மாள் தங்களிடம்வாடிக்கையாளர்களாக வருபவர்களைத் தூண்டி விட்டு சரசுவின் வீட்டிற்கு அனுப்பி, அவரது கதையை முடிக்கும்படி கூறியுள்ளார்.
இதன்படியே அவர்களும் சரசுவின் வீட்டிற்கு சென்று காரியத்தை முடித்ததும், பழனியம்மாளுக்குத் தகவல்கொடுத்தனர். தகவலறிந்த பழனியம்மாள், பயந்து போய் திருப்பூரில் அடைக்கலம் புகுந்தார்.
சரசு கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த போலீசார், அவரது வீட்டிற்குச் சென்று உடலைக் கைப்பற்றிமருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் திருப்பூரில் பதுங்கியிருந்த பழனியம்மாளைக் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.