For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாண்டிச்சேரி தேர்தல் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்ய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாபாண்டிச்சேரி முதல்வர் சணமுகத்துடனும், பா.ம.க. தலைவர் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால்அதில் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை.

தற்போதுபாண்டிச்சேரியில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் தங்கள் ஆட்சியை விட்டுத்தர தயாராக இல்லை.பா.ம.க.வுடனும் ஆட்சி பங்கீடுக்கு தயாராக இல்லை.

ஆனால் ராமதாசுக்கோ பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அவர்ஜெயலலிதாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழகத்தில் 27 தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் 10தொகுதிகளிலும் பா.ம.க. போட்டியிடும்.

பாண்டிச்சேரியில் சுழற்சி முறை ஆட்சி நடைபெறும். அதில் முதல் இரண்டரை ஆண்டு பா.ம.க. ஆட்சி செலுத்தும்என முடிவானது

காங்கிரஸ் பா.ம.கவுடன் ஆட்சி பங்கீடுக்கு தயாராக இல்லை. ராமதாசும் தன் முடிவை மாற்றிக் கொள்ள தயாராகஇல்லை. இதனால் பாண்டிச்சேரி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்த மாதம் 4ம் தேதி ராமதாஸ் காங்கிரசுக்கு பாண்டிச்சேரியில் காங்கிரஸ் -த.ம.ாகா இரண்டுக்குமாகசேர்த்து 9 தொகுதிகள் வழங்கப்படும். அ.தி.மு.க. 11 தொகுதிகளில் போட்டியிடும் இது குறித்த முடிவை இரண்டுநாட்களுக்குள் காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும் கெடு விதித்திருந்தார்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்த பாண்டிச்சேரிமுதல்வர் சண்முகம் திங்கள் கிழமை ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஜெயலலிதாவுடன் நடத்தியபேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. பாண்டிச்சேரி முதல்வர் பாண்டிச்சேரி சென்று விட்டார்என கூறினர்

ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியினரையும்,ராமதாசையும தனித் தனியாக சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால்காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில்,. மூன்று தலைவர்களும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறினர்.

அவர்ககள் மேலும் கூறுகையில், ராமதாஸ் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவதற்கு சம்மதிப்பாரா என்பதுசந்தேகம் எனவும் கூறினார். ஆனால் அதற்கு ராமதாஸ் எந்த விதமான பதிலும் கூறவில்லை என்றனர்.

திங்கள்கிழமை மாலை மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் முடிவு செய்திருந்தார்.ஆனால் மாலையில் ஜெயலலிதாவை அவர் சந்திக்கவில்லை. முன்னதாகவே அவர் பாண்டிச்சேரி சென்றுவிட்டார்.

பாண்டிச்சேரி செல்லும் முன் பாணடிச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசுவாமியும், பாண்டிச்சேரி முதல்வர்சண்முகமும் த.மா.கா. தலைவர் மூப்பனாரை சந்தித்து பேசினர்.

நாராயணசுவாமி நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரியில் பா.ம.க.வுடன் ஆட்சி பங்கீடு கிடையாது என்றகாங்கிரசின் முடிவில் எந்த விதமான மாற்றமும் கிடையாது என்றார்.

தேர்தலுக்கு இன்னும் 30 நாட்கள்தான் இருக்கும் நிலையில் பாண்டிச்சேரி கூட்டணி குறித்து எந்த முடிவும்ஏற்படவிலலை. பாண்டிச்சேரி கூட்டணியில் தொடர்ந்து கூட்டணி குழப்பம் நீடிக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதிதேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X