திருச்சி எம்.பி. தொகுதி: பா.ஜ.க. சார்பில் நம்பியார் மகன் போட்டி
சென்னை:
திருச்சி எம்.பி. தொகுதியில் போட்டியிட மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் குடும்பத்தினருக்கு வாய்ப்பளிக்கபா.ஜ.க மறுத்துவிட்டது. இந்தத் தொகுதியில் வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாறன் நம்பியாரை பா.ஜ.க.நிறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் மறைந்ததையடுத்து சட்டமன்றத் தேர்தலுடன் சேர்தது திருச்சி எம்.பி.தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.
இங்கு போட்டியிட ரங்கராஜனின் குடும்பத்தினர் ஆர்வமாக இருந்தனர். முதலில் ரங்கராஜனின் மனைவி இங்குபோட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், ரங்கராஜனின் சகோதரி லலிதா குமாரமங்கலம் இங்குபோட்டியிடுவது என அவர்களின் குடும்பத்தின் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்தத் தொகுதியில் போட்டியிட லலிதா வாய்ப்புக் கேட்டார். அவருக்கே தொகுதியும் வழங்கப்படும்என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந் நிலையில் திருச்சி எம்.பி. தொகுதியில் வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியார்போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லலிதாவுக்கு சம்பந்தமே இல்லாமல் திருப்பூர் சட்டமன்றத் தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது.