For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி கட்சிகளை மோசமாக நடத்துகிறார் ஜெ: சுவாமி குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா மற்றும் சிபிஐ கட்சிகளை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொகுதிபங்கீடு விஷயத்தில் மிகவும் மோசமாக நடத்துகிறார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிகுற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப்பெறும். இரண்டு கூட்டணிகளுமே பெரும்பான்மை பெறாவிடில் வெற்றி பெறும் சில தொகுதிகளை வைத்துநாங்கள் மூன்றாவது அணி அமைக்க முயற்சிப்போம்.

ஜனதா கட்சி தமிழக சட்டசபைத் தேர்தலில் 30 இடங்களிலும், பாண்டிச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில்தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடும்.

ஏப்ரல் 14 ம் தேதி நாங்கள் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியுடன் இணைந்து உசிலம்பட்டியில் தேர்தல்பிரசாரத்தைத் தொடங்க உள்ளோம்.

ஆயுதப் பேர ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றார் சுவாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X