செயலிழக்க வைக்கப்பட்ட பீரங்கி குண்டுகள்
சென்னை:
சென்னை, பம்மல் அருகே வெடி குண்டு வெடித்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட நான்கு பீரங்கி குண்டுகளில்மூன்று செயலிழக்க வைக்கப்பட்டன.
சமீபத்தில் சென்னை, பம்மலில் இருக்கும் பழைய இரும்புப் பொருட்களை விற்கும் கடையில்ராணுவத்தினரிடமிருந்து வாங்கி வந்த பழைய இரும்பு சாமான்களில் வெடிக்காமல் இருந்த பீரங்கி குண்டுகள்வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் இறந்து போனார்கள். ஒருவர் மருத்துமனையில் இறந்து போனார்.
வெடிவிபத்து நடந்த இடத்தை சோதனையிட்டபோலீசார் அங்கு வெடிக்காமல் இருந்த 4 பீரங்கி குண்டுகளைகண்டு பிடித்தனர். அவற்றில் 3 செயலிழக்கச் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில், வெடிவிபத்து நடந்த இடத்திலிருந்த கண்டெடுக்கப்பட்ட, வெடிக்காமல்இருந்த 4 பீரங்கி குண்டுகளில் 3 சென்னை புறநகர் பகுதியான வண்டலூரில் இருக்கும் போலீஸ் அகாடமிமைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு செயலிழக்கச் செய்யப்பட்டன. ஒரு குண்டு வெடிக்கும்தன்மையற்றது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications