திமுக கூட்டணிக்கு பாதிரியார்கள் ஆதரவு
சென்னை:
200 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் எஸ்ரா சண்முகம் தலைமையில் புதன்கிழமை திமுக கூட்டணிக்கு தங்கள்ஆதரவைத் தெரிவிப்பதாகக் கூறினர்.
தென்னிந்திய சர்ச், லூத்ரான் சர்ச், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்றப் பேரவை, இந்திய சமூக நீதி இயக்கம்ஆகியவற்றைச் சேர்ந்த பாதிரியார்கள் திமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாகக் கூறினர்.
இவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் நலன் காக்க முதல்வர் கருணாநிதிஎவ்வளவோ செய்திருக்கிறார்.
அதனால் தமிழகத்தில் மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு நாங்கள்ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம். திமுக கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம் என்றுகூறப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் கருணாநிதி கூறுகையில், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிறுபான்மைமக்களின் நலன் காக்கவும், அவர்களுக்காவும் பாடுபடும்.
மேலும் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பாதிரியார்கள் ஒத்துழைக்க வேண்டும்.
திமுக மத்தியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது குறித்து கிறிஸ்தவ மக்களில் சிலர் அதிருப்திஅடைந்தது உண்மை. ஆனால் திமுக எப்போதும் அனைத்து மக்களின் நலனையும் காக்கும் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications