For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி படுகொலை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கள்ளக்காதல் தகராறில் மிராசுதாரரை அரிவாளால் வெட்டி கொல்லப் பாய்ந்த மனைவியை அதே அரிவாளால்வெட்டிக் கொன்ற மிராசுதாரரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அரசூரைச் சேர்ந்தவர் குமார் என்ற குமாரசாமி. இவர் மனைவிலீலாவதி (22). இவர்கள் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது லீலாவதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், லீலாவதி புதன்கிழமை காலை, கணவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கீழே கிடக்கும் ஒருபொருளை எடுத்து தரும்படி கூறியுள்ளார்.

அப்போது அவர் கீழே குனியும்போது, குடத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டமுயன்றுள்ளார். இதைக் கண்ட குமார், தன் மீது அரிவாள் படாமல் தப்பி விட்டார்.

ஆத்திரம் அடைந்த அவர், அரிவாளைப் பிடுங்கி அதே இடத்தில் மனைவியை வெட்டி கிணற்றுக்குள் தூக்கிபோட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் லீலவாதி இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைதுசெய்தனர். மேலும் அவரிடம் ரத்தம் தோய்ந்த அரிவாளை கைப்பற்றியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X