இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
ஜகார்த்தா:
இந்தோனேசியா ஜாவாவில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன்வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வெளியேறி ஓடினர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாகத்தெரியவில்லை.
இதுகுறித்து இந்தோனேசியா பூகம்பவியல்துறை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமைகாலை 8.47 மணிக்கு மேற்கு ஜாவா பகுதியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காருட் பகுதியில் 5.8என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர் தார்மின் கூறுகையில், சுஹாபூமி, தாஸிக்மாலயா மற்றும் பாண்டுங் பகுதியில்நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை என்றார்.
இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகும். இங்குள்ள சுமத்ரா மாகாணம் பெங்க்குலு பகுதியில்கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications