சட்டசபை தேர்தல்: 17 முதல் சூறாவளி பிரசாரம் செய்கிறார் கருணாநிதி
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 17 ம் தேதி சென்னையில் தொடங்கி 4 நாட்கள் 4 மாவட்டங்களில் தேர்தல்பிரசாரம் செய்கிறார்.
தமிழகம், புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தொகுதிப்பங்கீடுகளை முடித்து விட்ட கருணாநிதி தேர்தல்பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
அவரது பயணத்திட்டம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையிலிருந்து பிரசாரத்தை துவக்கும் கருணாநிதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
17.4.2001: சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, திண்டிவனம், அச்சரப்பாக்கம், விக்கிரவாண்டி பகுதிகளில் தேர்தல்பிரசாரம் செய்கிறார். விழுப்புரத்தில் இரவு 10 மணிக்கு பிரசாரத்தை முடிக்கிறார்.
18.4.2001: முகையூரில் மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் துவக்குகிறார். திருக்கோவலூர், மடப்பட்டு, உளுந்தூர்பேட்டை, வடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய ஊர்களில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு இரவு 10மணிக்கு கடலூரில் முடிக்கிறார்.
19. 4.2001: மாலை 4 மணிக்கு புவனகிரியில் பிரசாரம் செய்யத் தொடங்குகிறார். தொடர்ந்து சிதம்பரம், சீர்காழி,செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 10மணிக்கு கும்பகோணத்தில் பிரசாரத்தை முடிக்கிறார்.
20.4.2001: 20 ம் தேதி காலை 9 மணிக்கு வலங்கைமானில் பிரசாரம் செய்யத் தொடங்குகிறார். பின்னர்திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ஊர்களில்பிரசாரம் செய்கிறார். பின்னர் அதே நாள் இரவு சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications