நடிகர் பிரபு சென்ற விமானத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
நடிகர் பிரபு கோவை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்வந்ததையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து கோவை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம், செவ்வாய்க்கிழமை காலை 11.10 மணிக்குகிளம்பியது.
இந்த விமானத்தில் நடிகர் பிரபு உள்பட 60 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படும் நேரத்தில் ஜெட் ஏர்வேஸ்விமான நிலையத்துக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி வந்தது.
தொலைபேசியில் பேசியவர், கோவை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும, அது எந்தநேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் கூறினார்.
இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் அதிகாரி விமான நிலைய மேலாளருக்கும், பாதுகாப்பு போலீஸாருக்கும் தகவல்கொடுத்தார்.
உடனடியாக, மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்ப்படையுடன் பாதுகாப்பு போலீஸார் அங்கு சென்று விமானத்தைசோதனை செய்தனர். விமான பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டுஎதுவும் வைக்கப்படவில்லை என்றும், அது வெறும் புரளி என்றும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications