பெண்களை கட்டிப்போட்டு பட்டப்பகலில் கொள்ளை
சேலம்:
சேலத்தில் அரிசி வியாபாரி வீட்டில் 20 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கத்தைப் பட்டப் பகலில்பெண்களைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்துச் சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், அயோத்திப் பட்டணத்தில் அரிசி வியாபாரம் செய்து வருபவர் சண்முகம். இவர் வியாபார விஷயமாகவெளியே சென்று விட்டார். அப்போது கடை மற்றும் வீட்டில் அவரது தாயார் பெருமாயி மற்றும் அவரது மனைவிநாகலட்சுமி ஆகியோர் இருந்துள்ளனர்.
கடைக்கு வந்த இருவர், அரிசி வேண்டும் , "சேம்பிள் கொடுங்கள் எனக் கேட்டுள்ளனர். பின்னர் அரிசியைத்தேர்வு செய்த பின்னர் குடோனில் உள்ள அரிசியைப் பார்க்க நாகலட்சுமி அழைத்துச் சென்றுள்ளார். அங்குநாகலட்சுமியைத் தாக்கி கட்டிப் போட்டு விட்டு அவரிடம் இருந்த நகையைப் பறித்துக் கொண்டனர்.
பின்னர் வீட்டிற்கு வந்து பெருமாயியையும் கட்டிப் போட்டு விட்டு பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரொக்கத்தைப்பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். பட்டப்பகலில் நடந்து இந்தக் கொள்ளை குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications