சென்னை வந்தது சி.ஆர்.பி.எப். போலீஸ் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் மே மாதம் 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனிமத்திய புறக்காவல் படை போலீசார் சென்னை வந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தேர்தல் பணிக்காக 2 கம்பெனி மத்திய புறக்காவல் படை போலீஸார்சென்னை வந்துள்ளனர். இவர்கள் மொத்தம் 186 பேர் உள்ளனர்.
இவர்கள் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 16 ம் தேதி மனுத்தாக்கல் தொடங்குகிறது. அப்போது அசம்பாவிதச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறுபாதுகாப்பதற்காக சி.ஆர்.பி.எப் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
முன்னதாக, 125 கம்பெனி சி.ஆர்.பி.எப். போலீஸ் படைகளை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications