தி.மு.க. கூட்டணியில் இணைந்தது த.பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து உருவான தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் திமுக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.
தமிழ் பாட்டாளி மக்கள் கழகம் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஒருதொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் கமிட்டி உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சருமானஆர்க்காடு வீராசாமி கூறுகையில், தமிழ் பாமக வியாழக்கிழமை திமுக கூட்டணியில் இணைந்தது. த.பா.ம.க.தலைவர் தீரனுக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் தீரனும், கருணாநிதியும் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம்செஞ்சி தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய நீதிக்கட்சி, திமுக கூட்டணியில் இணையுமா என்பது குறித்து நாங்கள் எதுவும் கூற முடியாது என்றார்ஆர்க்காடு வீராசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications