ஜெ.தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார் ஆலடி அருணா
சென்னை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில்போட்டியிட முடியாது என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ஆலடி அருணா கூறினார்.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கை ரத்து செய்யக் கோரியும், தான் குற்றவாளி இல்லை என்று கூறியும் தீர்ப்புகூறும்படி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கிறார் என்றார் அவர்.
இதுகுறித்து சட்ட அமைச்சர் ஆலடி அருணா வெளியிட்டுள்ள அறிக்கை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் வழக்கில் 3ஆண்டு தண்டனையும், சசி என்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டு தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதைநிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தான் தேர்தலில் போட்டியிடும் வகையில்,தான் குற்றவாளி இல்லை என்று கூறும்படி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிமலை சுப்ரமணியம் தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும் நீதிபதி கூறுகையில், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதை தேர்தல் ஆணையம்தான்முடிவெடுக்க வேண்டும்.
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் குற்றவாளி என்று குற்றம்சுமத்தப்பட்ட தான் தேர்தலில் போட்டியிட தனக்குஅளிக்கப்பட்ட தண்டனை தடையாக இருக்கும் என்று கூறி, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யும்படியும், தான் குற்றவாளி இல்லை என்றும் கூறும்படி மனுத்தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 409 ன்படி, சிறப்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம்ரத்து செய்யலாம். ஆனால் இந்த தண்டனை ஊழல்தடுப்பு பிரிவின்கீழ் அளிக்கப்பட்டிருப்பதால்உயர்நீதிமன்றத்தால் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி ஜெயலலிதா மனுவை தள்ளுபடிசெய்துள்ளார். இதிலிருந்து ஜெயலலிதா வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தெரிகிறது.
இவ்வாறு ஆலடி அருணா கூறினார்.
யு.என்.ஐ.