அதிமுக கூட்டணியில் இ.கம்யூ.போட்டியிடும் தொகுதிகள்
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) முடிவு செய்து, இது குறித்தான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் சிபிஐயும் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு 8 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 8 தொகுதிகளை மீண்டும் கேட்டது.ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற 8 தொகுதிகளிலிருந்து 4 தொகுதிகளை ஒதுக்கி புதிதாக 4 தொகுதிகளையும்ஜெயலலிதா ஒதுக்கினார்.
இதனால் சிபிஐ கட்சியினர் அதிருப்தியடைந்தனர். அவர்கள் முன்பு தாங்கள் வெற்றி பெற்ற திருப்பூர், பெருந்துறைதொகுதிகளை தங்களுக்கு கட்டாயம் ஒதுக்க வேண்டும் என ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ஜெயலலிதா அவர்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இதையடுத்து தங்களுக்கு ஒத்துக்கப்பட்ட தொகுதிகளை ஏற்றுக்கொண்டு, இது குறித்த ஒப்பந்தத்தில் சிபிஐசெயலாளர் நல்லகண்ணுவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கையெழுத்திட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. துறைமுகம்
2. பொன்னேரி (தனி)
3. தளி
4. அரூர் (தனி)
5. வேதாரண்யம்
6. திருத்துறைப்பூண்டி (தனி)
7. மன்னார்குடி
8. கோவில்பட்டி
இந்த தொகுதிகளில் துறைமுகம், பொன்னேரி, அரூர், வேதாரண்யம் ஆகியவை புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகளாகும்.
யு .என்.ஐ.












Click it and Unblock the Notifications