ஊட்டியில் மே மாதம் 11 ல் நாய்க்கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் நாய் கண்காட்சி வரும் மே 11ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதில் வெளிநாட்டு நாய் வகைகள்உள்பட 200 வகை நாய்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தென்னிந்திய கேனல் கிளப் கவுரவச் செயலர் லஜபதி கூறியுள்ளதாவது:
ஊட்டி சீசனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாய்க் கண்காட்சிகள் நடந்து வருகிறது. இந்த நாய் கண்காட்சியில்இந்த கண்காட்சியில் மும்பை, கோல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து வரும்நாய்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் நாய்கள் வந்து சேரவுள்ளன. 200வகை நாய்கள் இக் கண்காட்சியில் இடம் பெறும்.
ஜெர்மன் ஷெப்பார்டு, புல்டாக், மேல்டிப், செயின்ட் பெர்னார்டு போன்ற சிறப்பு வகை நாய்களும் இடம்பெறுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications