ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து ஆசையன் போட்டி
திண்டுக்கல்:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.கவைச் சேர்ந்த பெ.ஆசையன் போட்டியிடுகிறார்.
இவர் ஆண்டிப்பட்டியில் 3 முறை போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயவாளர்ஜெயலலிதா தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளிலும்போட்டியிடுகிறார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க.வைச் சேர்ந்த ஆசையன் போட்டியிடுகிறார்.
இவர் 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 13,701 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர்ஏ.முத்தையாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜானகி அம்மாளை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். இவர்இது வரை 3 முறை ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தற்போது 4வது முறையாக ஆண்டிப்பட்டியில் போட்டியிடுகிறார். இவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.