For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பிக் வழக்கு: ஜெ.க்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஸ்பிக் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம்கோர்ட்திங்கள்கிழமை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே.டி.தாமஸ் மற்றும் ஆர்.பி.சேத்தி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தனக்குஆதரவான சாட்சியங்களை அடுத்த நான்கு வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.

இதற்கிடையே, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஜெயலலிதாவுக்கும், ஸ்பிக் முத்தையாவுக்கும் எதிராகசென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி, ஸ்பிக் நிறுவனத்துக்கு அரசு நிறுவனமான டிட்கோவின் பங்குகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன.இதனால் டிட்கோவுக்கு (அரசுக்கு) ரூ 77 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஜெயலலிதா, ஸ்பிக் நிறுவனத் தலைவர்ஏ.சி.முத்தையா, அவரது தந்தை சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து கூட்டாக இந்த மோசடியில் ஈடுபட்டனர் எனகுற்றம்சாட்டி பொதுநலன் வழக்கை சுவாமி தொடர்ந்தார்.

இதற்கு ஜெயலலிதாவும், முத்தையாவும்தான் காரணம் என்றும், அவர்களை விசாரிக்கும்படியும் கூறியிருந்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, ராமச்சந்திரன்மற்றும் முத்தையாவுக்கு எதிராகக் ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. பின்னர்இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து ஜெயலலிதா ஆகஸ்ட் 30 ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதானவழக்கு விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X