For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூகம்ப பகுதியில் ஜாதி: லண்டன் அமைப்பு கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாதி அடிப்படையில்நிவாரணப்பொருட்களை வழங்கப்பட்டதைத் தடுக்காமல் இருந்த இந்திய அரசு அலுவலகங்களை லண்டனில்செயல்படும் அம்பேத்கார் ஆதரவாளர்கள் கடுமையாகக் விமர்சித்துள்ளனர்.

லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் கடந்த சனிக்கிழமை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்காரின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசியவர்கள், லண்டன் பத்திரிக்கைகளில் வெளியான செய்தியைஆதாரமாகக் கொண்டு பேசினார்கள். குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்குநிவாரணப் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை.

அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜாதி வாரியாகத் தரம்பிரித்து இந்திய அரசு நிவாரணப் பொருட்களைவழங்கியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளன லண்டன் பத்திரிக்கைகள்.

அம்பேத்கார் மற்றும் புத்த அமைப்புக்களின் செய்தித் தொடர்பாளர் சானன் சாஹல் கூறுகையில், குஜராத்தில்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை.

தலித், தாழ்த்தப்பட்டவர்கள், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்குநிவாரணப்பொருட்கள் வழங்கப்படவில்லை. குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள்அனைத்து விதமான நிவாரண உதவிகளையும் செய்தன.

ஆனால் அது முறையாக தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை. ஜாதி வாரியாகத் தரம் பிரித்துபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன.

அதாவது நிவாரண உதவி தேவைப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. உயர்ஜாதிமக்களுக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

லண்டனில் வாழும் இந்தியர்கள் அனைவரும் தாங்கள் இந்தியர்கள் என்று மிகவும் பெருமையுடன் வாழ்கிறார்கள்.ஆனால் இந்தியாவிலேயே இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

இங்குள்ள எதிர்க்கட்சிகள் கூட, தேவைப்படுபவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காமல் ஜாதிஅடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வழங்குவது ஏன் என்று கேட்கிறார்கள். குஜராத் மக்களிடமிருந்து எங்கள்அலுவலகத்துக்குக் கடிதங்கள் வருகின்றன. அதில் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்காதது குறித்துஎழுதியுள்ளார்கள் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X