ஒருவழியாய் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடாளுமன்ற கூட்டம் 3 வார இடைவெளிக்குப் பின் திங்கள்கிழமை கூடுகிறது. ஆயுத பேர ஊழல் விவாகரம்காரணமாக மீண்டும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டவது கட்ட கூட்டம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

தெஹல்கா டாட்காம் இன்டர் நெட்தளம் வெளியிட்ட ஆயுதபேர ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய்அரசு பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்நடத்தின.இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் 10 நாட்கள் தொடர்ந்துபாதிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தை நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகி 3 வார காலம் ஒத்திவைத்தார்.

3 வார இடைவெளிக்குப்பின் நாடாளுமன்றம் மீண்டும் திங்கள் கிழமை கூடுகிறது. இப்போது மீண்டும் ஆயுத பேரஊழல் விவகாரம் காரணமாக எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனதாகட்சி தலைவர் சுப்ரமணியம்சுவாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது சி.பி.ஐ.விசாரணை நடத்தவேண்டும் என கூறி மத்திய அரசிடம் பல ஆவணங்களை கொடுத்து வற்புறுத்தியுள்ளார். இந்த பிரச்சனையும்நாடாளுமன்றத்தில் எழுப்பப்படலாம் என தெரிய வருகிறது.

திங்கள்கிழமை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியவுடன் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மறைவு அஞ்சலிசெலுத்தப்பட்டதும் சபை ஒத்தி வைக்கப்படும்.

நாடாளுமன்றம் அடுத்தமாதம் 11ம் தேதி வரை நடைபெறும். பிரதமர் தனது ஈரான் சுற்றுப்பயணம் குறித்துஅறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறார். மேலும் இந்த கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா உட்பட 36மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+