காங். தலைமையில் பாண்டிச்சேரியில் 3 வது அணி
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் தலைமையில் புதுவையில் 3 வது அணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும், பிற 6 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன.
ஆனால் இதே கூட்டணி பாண்டிச்சேரியில் ஏற்படுவதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. காங்கிரசுக்கு 9 தொகுதிகள்கொடுக்கப்படும். அவர்கள் இழுத்தடிக்காமல் விரைவில் பதில் கூற வேண்டும் என்று ராமதாஸ் ஒரு அறிக்கைவிட்டார்.
இதையடுத்து காங்கிரசும் பதிலடி கொடுத்தது. இரண்டரை ஆண்டு கால ஆட்சிப் பகிர்வு முறைக்கு காங்கிரஸ் ஒருபோதும் சம்மதிக்காது என்று கூறியது.
இந்நிலையில் பத்து தொகுதிகளை காங்கிரஸ், தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தருவதாகக் கூறியஜெயலலிதா இறுதியில் அந்தத் தொகுதிகளையும் தானே எடுத்துக் கொண்டார்.
பாண்டிச்சேரியில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறி வேட்பாளர் பெயர்களையும் அறிவித்துவிட்டார்.
இதனால் அரண்டு போன காங்கிரஸ் கட்சி 3 அணி அமைப்பது தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இதுகுறித்து பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,
அதிமுகவுக்குச் சமமாக 19 தொகுதிகளில் காங்கிரசும், 6 தொகுதிகளில் தமாகாவும் மீதமுள்ள தொகுதிகளில்கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடும்.
இதுகுறித்து உடன்பாடு ஏற்பட்டதும், முதல்வர் சண்முகமும், நானும் செவ்வாய்க்கிழமை டெல்லி சென்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். அதன் பிறகு ஏப்ரல் 18 ம் தேதி வேட்பாளர்பட்டியல் வெளிடுவோம்.
பாண்டிச்சேரியில் வரும் தேர்தலில் எங்கள் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்நாராயணசாமி.