For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் டீசல் விலை உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் புத்தாண்டையொட்டி கடந்த நான்கு நாட்கள் விடுமுறையில் சென்றிருந்த மக்கள் திங்கள்கிழமைஅலுவலகம் திரும்பியதும் டீசல் விலை உயர்ந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஆறு மாதங்களில் 3 வது முறையாக பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை இலங்கை அரசுஉயர்த்தியுள்ளது. தற்போது இவைகளின் விலை 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரூ 24. 50 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை தற்போது ரூ 27.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறபகுதிகளில் வீடுகளில் விளக்குகளுக்கும், சமையலுக்கும் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்று19.40 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலை யை 12.9 சதவீதம் உயர்த்தியது இலங்கைஅரசு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் வருடப்பிறப்பு கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X