தந்தையையும் மகனையும் மோதவிடும் அம்மா
சென்னை:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாமரைக்கனியை எதிர்த்து அவரது மகனையே வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அவரதுகுடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார் ஜெயலலிதா.
அ.தி.மு.க. எம்.எல்.ஏவான தாமரைக்கனிக்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை ஒதுக்க இயலாது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா தெரிவித்தார்.
இதனால் கோபம் வந்தது தாமரைக்கனிக்கு. தனித்து சுயேட்சையாக போட்டியிடுவேன்என போர்க்கொடி பிடித்தார்.
அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதாகஜெயலலிதா கூறியதும், குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறார் என குற்றம்கூறினார் தாமரைக்கனி.
சுயேட்சையாக போட்டியிடவும் முடிவு செய்தார். இவர் சென்ற முறைகூடசுயேட்சையாக போட்டியிட்டு வென்று பின்னர் அ.தி.மு.கவில் இணைந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அதில்தாமரைக்கனியின் மகனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை ஒதுக்கியுள்ளார்.
இதன் மூலம் தந்தையும், தமயனும் தேர்தலில் மோதுவது உறுதியாகிவிட்டது.
என்ன செய்யப்போகிறார் தாமரைக்கனி? மகனுடன் மோதப் போகிறாரா? இல்லைதேர்தலிலிருந்து ஒதுங்கப் போகிறரா?












Click it and Unblock the Notifications