ஜெ. வேட்புமனு ஏற்கப்படுமா? 24 ம் தேதி தெரியும்
கிருஷ்ணகிரி:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிற்பகல் கிருஷ்ணகிரியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அவரது மனுவை கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரியும், தர்மபுரி ஆர்.டி.ஓ.வுமான மதிவாணன் பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது வரும் 24 ம் தேதி தெரிய வரும் என்று கூறினார்.
ஜெயலலிதாவின் வேட்புமனுவைப் பெற்றுக் கொண்ட அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் ஒரு தேர்தல் அதிகாரி என்ற முறையில் வேட்பாளர்கள் கொடுக்கும் மனுவை ஏற்றுக் கொள்ளத்தான்வேண்டும்.
வேட்புமனு மீதான விசாரணை பரிசீலனை நாளான இம்மாதம் 24 ம் தேதி நடைபெறும். அந்த நாள்தான் மிகவும்முக்கியமான நாளாகும்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா கூடாதா என்பது குறித்து தேர்தல் கமிஷனிடமிருந்து எனக்கு எந்தஉத்தரவும் வரவில்லை.
தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள விதிமுறைகள்படி அவரது வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு சட்டதிட்டத்துக்குஉட்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.