சிங்கப்பூரில் கால் பதிக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
டெல்லி:
இந்தியாவின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் ஆசிய-பசிபிக்பகுதிகளில் தனது சேவையை விரிவுபடுத்துவதற்காக அலுவலகம் ஒன்றை சிங்கப்பூரில் தொடங்கி உள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதிகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனாவின் வடபகுதி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துஆகிய நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்துவதற்காக இந்த அலுவலகத்தை துவக்கியதாக சத்யம்கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நெட்வொர்க் துறையில் ஈடுபட்டு வரும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், தைவான் நாட்டின் தொலைதொடர்புத்துறை, ஹாங்காங் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மற்றும் டூ பாண்ட், அல்காடெல், சிட்டி பாங்க்போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தேவையான நெட்வொர்க் சேவையை அளித்துள்ளது.
5 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான சிங்கப்பூர்அலுவலகத்தில் தற்போது 200க்கும் அதிகமானவர்கள் பணிபுரிவதாக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் துணைத்தலைவர் வீரேந்தர் அகர்வால் சிங்கப்பூர் அலுவலக திறப்புவிழாவில் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் தலைவர் கோ கெங் வா இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் சிங்கப்பூருக்கான இந்திய ஹைகமிசனர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்