பாண்டிச்சேரியை சிங்கப்பூராக்குவோம் என்கிறது பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அனைத்து துறைகளிலும் வளம் பெற்று மக்கள் மனமகிழ்வோடு வாழும் வகையில் பாண்டிச்சேரியை சிங்கப்பூர்போல் மாற்றுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.
பாண்டிச்சேரி மாநிலத்திற்கு தனி தேர்தல் அறிக்கையை கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டார்.
பாண்டிச்சேரிக்கு பா.ம.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை:
1. பாண்டிச்சேரியை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்
2. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
3. ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படும்.
4. உயர்ஜாதிகளில் வறுமையில் வாடும் பின்தங்கிய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடுஅளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
5. இந்தியாவிலேயே பாண்டிச்சேரியை முன்மாதிரியான மாநிலமாக மாற்றுவோம்.
6. பாண்டிச்சேரியை சிங்கப்பூர் போல் மாற்றுவோம்.












Click it and Unblock the Notifications