For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வை எதிர்த்து தாமரைக்கனி முற்றுகை போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஏப்ரல் 20 ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்ய வரும் ஜெயலலிதாவை எதிர்த்தும், எனதுமகனை என்னிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கூறியும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக தாமரைக்கனிகூறியுள்ளார்.

இந்த முறை தமிழக சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தாமரைக்கனிக்கு அதிமுகவில் சீட்கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அவரது மகன் இன்பத்தமிழனுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சுயேச்சையாகப் போட்டியிடுப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஜெயலலிதா வரும் 20 ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வருகிறார். அப்போது நானும்,எனது குடும்பத்தாரும் எனது மகன் இன்பத்தமிழனை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி முற்றுகைப் போராட்டம்நடத்துவோம். இதற்குப் போலீசாரிடம் அனுமதி வாங்கி விட்டேன் என்றார் தாமரைக்கனி.

இதற்கிடையே, இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ள தாமரைக்கனி, அதிமுக சார்பில் போட்டியிடஉள்ள இன்பத்தமிழன் ஆகியோர் புதன்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X