மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் ஒரே மாதத்தில் வாழ்வை முடித்தனர். மணப் பெண்ணை கொன்று காதலனும்தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ரங்கநாதபுரம் 3வது வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் மகேந்திரன் (25).இவர் தர்மபுரி மாவட்டம், ஊத்தாங்கரை அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த அப்பாவுவின் மகள் மணிமேகலை (22)யை காதலித்துவந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மணிமேகலையை மகேந்திரன் திருப்பூருக்கு அழைத்து வந்து விட்டார். மணிமேகலை,மகேந்திரன் இருவரும் உறவினர்கள்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் குலதெய்வக் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

வியாழக்கிழமை காலை இவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்கதவை திறந்து பார்த்தனர். அப்போது மணிமேகலையின் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவரது தாவணியில் மகேந்திரன்தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+