மூப்பனார் மகனுக்கு டிக்கெட் கிடைக்குமா?
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசனுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடடிக்கெட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்துமொத்தம் 47 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் போட்டியிடுகிறது.மீதமுள்ள இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமைதான் தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. டெல்லியில்அக்கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் 7 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டார்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கனவே 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டது. வெள்ளிக்கிழமைஇக்கட்சியின் இரண்டாவது பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.
இரண்டாவது பட்டியலில் பல பிரபலங்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில்முக்கியமானவர் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளில் சமீப காலமாக அதிக அளவில் கோவிந்தவாசன் ஈடுபாடுகாட்டி வருகிறார். ப.சிதம்பரம் கட்சியை விட்டு நீக்கப்படுவதற்குக் கூட கோவிந்தவாசன்தான் காரணம் என்றும்த.மா.கா. வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
கட்சிக்குள் தம்பி அய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் கோவிந்தவாசன் வரும் சட்டசபைத் தேர்தலில்போட்டியிடுவதன் மூலம், தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அவர் பாபநாசம் தொகுதியில் போட்டியிடலாம் என்றுகூறப்படுகிறது. அத்தொகுதியின் தற்போதைய வேட்பாளராக கருப்பண்ண உடையார் உள்ளார். அவருக்கு மீண்டும்சீட் கிடைப்பது சந்தேகம் என்று கூறுகிறார்கள். எனவே உடையாருக்குப் பதில் கோவிந்தவாசனுக்கு சீட் கிடைக்கும்என்றும் த.மா.கா தரப்பில் கூறப்படுகிறது.
ஒருவேளை கோவிந்தவாசன் போட்டியிடாவிட்டால், மூப்பனாரின் தம்பி ரங்கசாமி மூப்பனாரின் மகன் சுரேஷ்போட்டியிடலாம் என்று தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் மகன் அன்புமணி வரும் தேர்தலில் போட்டியிடுகிறார். முதல்வர்கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சென்னையில் போட்டியிடுகிறார். தாமரைக்கனி எம்.எல்.ஏ.வின் மகன்இன்பத்தமிழன் தந்தையை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அந்த வரிசையில் இப்போது கோவிந்தவாசன்சேரவுள்ளார்.












Click it and Unblock the Notifications