இலங்கையில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிப்பு
கொழும்பு:
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், விடுதலைப்புலிகளின் 4 படகுகளை தகர்த்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்புதெரிவிக்கிறது.
இதுகுறித்து இலங்கை ராணுவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் சாலை பகுதியில் உள்ள கடலில் புலிகள் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கடற்படை வீரர்களும்,விமானப்படை வீரர்களும் சேர்ந்து கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் புலிகளின் 4 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. 3 படகுகள் தப்பித்துவிட்டன. இந்தத் தாக்குதலில் 4 இலங்கை கடற்படை வீரர்கள்4 பேருக்குக் காயம் ஏற்பட்டது. புலிகள் தரப்பில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
இதே போல் கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுதலைப்புலிகளின் படகுகளை கடற்படையினர் தகர்த்தனர் என்றார்.
முன்னதாக, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள சண்டைநிறுத்தம் இந்த மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications