பெங்களூர் - தூத்துக்குடி ரயிலில் கொள்ளை
சென்னை:
பெங்களூரிலிருந்து தூத்துக்குடி சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத கும்பல் பயணிகளின் நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுதப்பித்தது.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
பெங்களூரிலிருந்து புதன்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அது இரவு 10 மணிக்குபங்காருப்பேட்டைக்கும், வரதாபுரத்துக்கும் இடையே வந்து கொண்டிருந்த போது ரயிலில் பயணிகள் போல் இருந்த சிலர் ரயில் பயணிகளைமிரட்டி நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ரயிலில் இருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.
இதே போல் அதே நாள் இரவு பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் பங்காருப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போதுஅதே கும்பல் ரயிலின் அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி ரயிலுக்குள் ஏறியது.
பின்னர் பயணிகளை மிரட்டி பணம், நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் அதே ரயிலில் பயணம் செய்த ரயில்வே போலீசார்கொள்ளைக்கும்பல் ரயிலில் ஏறியுள்ளனர் என்று தெரிந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அக்கும்பல் ரயிலிருந்துகீழே குதித்து தப்பித்து ஓடினர். இதனால் பெங்களூர்-சென்னை ரயிலில் நடக்கவிருந்த கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.